சொல்லிட்டாங்க...

* கொரோனா தாக்கத்தால் உலக பொருளாதாரமோ ஸ்தம்பித்து நிற்கிறது. வங்கிகளில் வராக்கடன் அதிகரிக்கும் சூழ்நிலையும், முதலீடுகள் குறையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. - ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ்

* மத்திய பாஜ அரசின் தேர்தல் நடத்தும் சட்டத்திருத்தம் விதிமுறை சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமையை குடிமக்களுக்கு உறுதி செய்யுமா என்பது கேள்விக்குறி. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

* கூட்டுறவு வங்கிகளும் சங்கங்களும் நகைக்கடன் வழங்கக் கூடாது என அறிவித்து நகைக்கடனை ரத்து செய்கிறது அதிமுக அரசு. கூட்டுறவின் நோக்கமும் சிதையும்; சாமானியர்களின் வாழ்வும் நிர்கதியாகும். - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்.

* கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தப்பட்டுள்ளது சாதாரண ஏழை, நடுத்தர மக்களுடைய நெருக்கடியை மேலும் பல மடங்கு அதிகரிக்கும். - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

Related Stories: