பிரிந்து சென்ற பசுவும் காளையும் இணைந்தன

வாடிப்பட்டி: மதுரை பாலமேட்டை சேர்ந்தவர் விவசாயி முனியாண்டி. இவரது பசு மாடும், மஞ்சமலை கோயில் காளையும் ‘நட்புடன்’ சுற்றித்திரிந்தன. பசுவை விற்க 2 நாட்களுக்கு முன்பு சரக்கு வாகனத்தில் ஏற்றியதை கண்ட காளை, வாகனத்தை வழிமறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. தகவலறிந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் 2வது மகன் ஜெயபிரதீப், அந்த பசுவை விலைக்கு வாங்கி, கோயில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்து, பசுவையும் காளையையும் இணைத்து வைத்தார்.

Related Stories: