×

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யும்

சென்னை: தமிழகத்தில் நிலவும் வெப்ப சலனம் காரணமாக 4 மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், சேலம், தர்மபுரி, புதுவை, காரைக்கால், பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். திருவள்ளூர், வேலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். மேற்கண்ட மாவட்டங்களில் சில இடங்களில் இரண்டு நாட்களுக்கு தொடர்ச்சியாக மழை பெய்யும். சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : districts ,Tamil Nadu , Tamil Nadu, 4 districts, thunder, heavy rain
× RELATED தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இரவு 7...