×

தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதி 1,456 ஆக உயர்வு

சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 1456 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் உயரத் தொடங்கியுள்ளது. அதாவது கடந்த முறை தமிழக அரசு வெளியிடப்பட்ட அரசாணையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 1089 ஆக இருந்தது. இது தற்போது 1456 ஆக உயர்ந்துள்ளது. சென்னை மாவட்டத்தில் அதிகப்பட்சமாக 276 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. சேலத்தில் 138 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதே போல முழு ஊரடங்கு அமலில் உள்ள மதுரையில் 108 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும், திருப்பூரில் 97, திருப்பத்தூரில் 85 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் இருப்பதாக தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : area ,Tamil Nadu ,Corona , Tamil Nadu, Corona, restricted area, rising to 1,456
× RELATED ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றுக்கு...