நிதி நிறுவனத்தில் ரூ.500 கோடி வரை மோசடி சினிமா தயாரிப்பாளர் 3 பேருக்கு சம்மன்

சாயல்குடி: சென்னையை சேர்ந்தவர் நீதிமணி, ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ஆசிரியர் ஆனந்த். இருவரும் இணைந்து நிதி நிறுவனம் நடத்தி பல கோடி மோசடி செய்தனர். இது தொடர்பாக ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்கு பதிந்து, கடந்த ஜூன் 10ம் தேதி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இருவரும் ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமின்றி, சிவகங்கை, மதுரை, சேலம் என தமிழகம் முழுவதும் ரூ.500 கோடி வரை மோசடி செய்துள்ளதாக தெரிகிறது. மேலும், திரைப்பட தயாரிப்பாளர்களான சேலத்தை சேர்ந்த சிவா, சென்னை தி.நகர் தணிகாசலம் சாலையை சேர்ந்த ஞானவேல்ராஜா, சென்னை கே.கே.நகரை சேர்ந்த முருகானந்தம் ஆகியோரிடம் கோடிக்கணக்கில் பணம் கொடுத்துள்ளதாக இருவரும் போலீசிடம் கூறியுள்ளனர். இதன் அடிப்படையில், திரைப்பட தயாரிப்பாளர்கள் மூவரையும் வரும் 20ம் தேதி முதல் 23ம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு பஜார் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Related Stories: