நாளை பாமக சிறப்பு செயற்குழு கூட்டம்: ஜி.கே.மணி அறிவிப்பு

சென்னை: பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கை: பாமக 32வது ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு செயற்குழுக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு இணைய வழியில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி  ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் 32வது ஆண்டு விழா சிறப்பு செயற்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்கிறார்.கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் பொருளாளர் திலகபாமா ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: