×

மனைவி இறந்ததை தொடர்ந்து கணவனும் கொரோனாவுக்கு பலி

கூடுவாஞ்சேரி: காட்டாங்ககொளத்தூர் ஒன்றியத்தில், கொரோனாவால் மனைவி இறந்ததை தொடர்ந்து, அடுத்த ஒரே வாரத்தில் கணவனும் கொரோனா பாதிப்பால் பலியானார். இதனால், அப்பகுதியில் பெரும் பீதியும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், வண்டலூர் ஊராட்சிக்குட்பட்ட ஓட்டேரி 2வது தெருவை சேர்ந்த 48 வயது பெண் கொரோனாவால், கடந்த வாரம் பலியானார். இவரது, 48 வயது மதிக்கதக்க கணவர் தொற்றால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் நேற்று பரிதாபமாக சிகிச்சை பலனளிக்காமல் பலியானார். இதேபோல், காரணைபுதுச்சேரி தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த, 72 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ஏற்கனவே தொற்று இருந்து வந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர், வீடு திரும்பிய அவருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டதால் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சை அப்பகுதி மக்கள் வரவைத்தனர். அதற்குள், அந்த முதியவருக்கு நெஞ்சு வலி மற்றும் மூச்சு திணறல் அதிகமானதால் திடீரென உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி மற்றும் சுகாதார துறையினர் அங்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் ஒரே நாளில் இரண்டு பேர் அடுத்தடுத்து கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு பலியானதால் அப்பகுதிகளில் பெரும் பீதியும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

Tags : death ,Corona , Wife, husband, corona, killed
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...