×

தனிமைப்படுத்தியும் ஊர் சுற்றிய 10 பேர் மீது போலீசார் வழக்கு

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட தகினிக்கோட்டை, எம்.ஜி.எம் நகர், அன்னை இந்திரா காந்தி நகர், கடம்பத்தூர், ஏகாட்டூர் ஆகிய பகுதிகளில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் தனிமையில் இல்லாமல், தொற்று பரவும் வகையில் வீடுகளில் இல்லாமல் வெளியில் சுற்றுவதாக தகவல்கள் வந்தது. இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் கொரோனாவால்  தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது வீட்டில் தனிமையில் இல்லாமல், தொற்று பரவும் வகையில் வெளியில் சென்றிருந்த 5 பேர் மீது திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதேபோல் ஏகாட்டூர் பகுதியில் வீட்டில் தனிமையில் இல்லாமல் வெளியே சென்றிருந்த 5 பேர் மீது கடம்பத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இவ்வாறு நேற்று முன்தினம் ஒரு நாள் மட்டும் 10 பேர் மீது நோய் தொற்று பரவும் வகையில், ஊர் சுற்றியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : town , Isolation, around town, 10 people, police case
× RELATED ஆரணி டவுன் தர்மராஜா கோயில் அக்னி...