திருவள்ளூர்: திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில், தலைவர் உஷா பிரேம்சேகர், செயலாளர் சுமிதாசுந்தர், பொருளாளர் மணி ஆகியோர் தலைமையில் திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம், ஊராட்சி மன்ற தலைவர்கள் கொடுத்த மனுவின் விவரம்: திருவள்ளூர் ஒன்றிய ஊராட்சிகளுக்கு, 14வது நிதிக்குழுவின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இதற்கான பணி தேர்வு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் பெறுவதற்கான நடைமுறைகள் ஊராட்சிகளிடம் இருந்துவந்தது.