ஆவடி: ஆவடி அடுத்த மோரை கிராமம், திருமலை நகரைச் சேர்ந்தவர் சரவணன் (42). லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். இவரது மைத்துனர் நரேஷ்குமார் (30). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து சரவணன், நரேஷ்குமார் இருவரும் பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். பைக்கை சரவணன் ஓட்ட, நரேஷ்குமார் பின்னால் அமர்ந்திருந்தார். இவர்கள் வண்டலூர் - மீஞ்சூர் 400 அடி வெளிவட்ட சாலை, ஆவடி அருகே வெள்ளானூர் அருகே ஆர்ச் அந்தோணியார் நகர் பகுதியில் பைக்கில் வந்தனர். அப்போது, அங்கு எண்ணூரில் இருந்து ஒரகடம் நோக்கி நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி பழுதாகி சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தது.