×

கொட்டகையில் கட்டியிருந்த 10 வெள்ளாடுகள் திருட்டு

திருவள்ளூர்: திருவள்ளூர் லட்சுமிபுரம் காலனியை சேர்ந்தவர் பிரபு (45). இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றுவிட்டு, மாலையில் தனது வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் கட்டிவைத்துவிட்டு, இரவு உறங்கச் சென்றார். நேற்று அதிகாலை எழுந்து பார்த்தபோது தனது வீட்டின் கொட்டகையில் கட்டி வைத்திருந்த 10 வெள்ளாடுகள் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கட்டி வைத்து இருந்த ஆடுகளை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடி, டெம்போவில் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிந்து கட்டி வைத்த ஆடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : Theft , Shed, 10 goats, theft
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...