முட்புதரில் மதுபானம் விற்ற கால்டாக்ஸி டிரைவர் கைது

பட்டாபிராம்: ஆவடி அடுத்த பட்டாபிராம், பாரதியார் நகர், திலகர் தெருவில் உள்ள முட்புதரில் மதுபானங்கள் விற்பதாக பட்டாபிராம் போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணன், எஸ்.ஐ தீபா ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, அங்குள்ள முட்புதரில் மறைத்து வைத்து மதுவிற்ற வாலிபரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (37). கால்டாக்ஸி டிரைவர். ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் இருந்துள்ளார். எனவே திருவள்ளூர் பகுதியில் இருந்து மதுபானங்களை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் அவரிடமிருந்து 140 குவாட்டர் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

Related Stories: