மூதாட்டியிடம் 8 சவரன் பறிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் மனைவி மஞ்சுளா (64). இவர் உடல்நிலை சரியில்லாததால், மாத்திரை வாங்க, சிடிஎச் சாலையில் உள்ள மெடிக்கல் ஸ்டோருக்கு நடந்து சென்றார். அப்போது அத்தெருவில் பைக்கில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த மர்ம நபர்கள் இருவர், மஞ்சுளாவிடம் முகவரி ஒன்றை காண்பித்து எப்படி செல்ல வேண்டும் என கேட்டபடியே, மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தாலி சரடினை பறித்துக் கொண்டு தப்பினர். இதன் மதிப்பு ரூ.1.60 லட்சம். இதுகுறித்து, மஞ்சுளா கொடுத்த புகாரின்பேரில் செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தாலி சரடினை, பைக்கில் வந்து கொள்ளையர்கள் பறித்துச் சென்ற சம்பவம், பெண்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: