சென்னை: கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வுகளுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த மாணவர் அம்ஜத் அலிகான் என்பவர் சென்னை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். கொரோனா தனிமை முகாம்களாக உள்ள கல்லூரிகளில் தேர்வு நடத்தினால் மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் என மனுவில் கருத்து தெரிவித்துள்ளார்.