×

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு: 2021-ம் ஆண்டிலிருந்து கொரோனா தடுப்பூசிகள் கிடைக்க வாய்ப்பு: மருத்துவ நிபுணர் பிரதீப் கவூர் ட்விட்..!!

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் 2021-ஆம் ஆண்டிலிருந்து கொரோனா தடுப்பூசிகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக பிரதீப் கவூர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் 2021-ஆம் ஆண்டிலிருந்து கொரோனா தடுப்பூசி கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தடுப்பூசிகள் நடைமுறைக்கு வந்தவுடன், அதன் பின்னர் தேவையான தடுப்பூசிகளை தயாரிக்க போதுமான கால அவகாசம் தேவைப்படும். தடுப்பூசி மட்டுமே கொரோனாவிற்கான சிறந்த மருந்தாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் (Bharat Biotech) தயாரித்த இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி கோவாக்சின், அடுத்த வாரத்திற்குள் மனிதர்கள் மீதான பரிசோதனைகளைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவாக்சின், இது கொரோனா வைரஸ் (COVID-19) நாவலுக்கு எதிரான இந்தியாவின் முதல் உள்நாட்டு தடுப்பூசி ஆகும், மேலும் ICMR மற்றும் புனேவின் NIV உடன் இணைந்து பாரத் பயோடெக் உருவாக்கியுள்ளது. கோவாக்சின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனையை சுமார் 1,100-க்கும் மேற்பட்டவர்கள் மீது பரிசோதிக்கப்பட உள்ளது.

அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் கொரோனாவுக்கு புதிய தடுப்பூசி கண்டுபிடிக்கும் பரிசோதனைகள் நடந்து வருகின்றன. மனிதர்களுக்கு மருந்து அளிக்கும் பரிசோதனை, சில மாதங்களுக்கு முன் துவங்கியது, தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. இந்நிலையில், ICMR எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இந்திய வைராலஜி மையம் மற்றும் தெலுங்கானா மாநிலம், ஐதராபாதைச் சேர்ந்த, பாரத் பயோடெக் நிறுவனத்துடன் இணைந்து, COVAXIN என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளன.

Tags : Pradeep Kaur ,Corona ,India , Corona infections on the rise in India: Corona vaccines likely to be available from 2021: Medical expert Pradeep Kaur tweets .. !!
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...