சென்னை: பருவமழையை எதிர்கொள்ள செய்ய வேண்டிய பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் நாளை சென்னை மாநகராட்சி ஆணையர் ஆலோசனை நடத்துகிறார். பருவமழையை எதிர்கொள்ள செய்ய வேண்டிய பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் காவல்துறை, பொதுப்பணித்துறை, கடலோர காவல்படை, ரயில்வே, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.