×

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் உறுதி: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முதல்வர் முகாம் அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி,  பணியாளர்களுக்கு பரிசோதனை நடந்தது. முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திலும் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 105 பரிசோதனை  மையங்களை ஏற்படுத்தி, நேற்று வரை 15 லட்சத்து 85 ஆயிரத்து 782 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக தமிழக முதல்வர் அவர்களுக்கும், முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் 13.07.2020 இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் முதலமைச்சருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் பணிபுரியும் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : Edappadi Palanisamy ,Government of Tamil Nadu ,Tamil Nadu , Tamil Nadu Chief Ministe,r Edappadi Palanisamy tested, corona infection,Government, Tamil Nadu
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...