சென்னையில் கொரோனாவுக்கு காவல் உதவி ஆய்வாளர் உள்பட 14 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த காவல் உதவி ஆய்வாளர் உள்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 5 பேர் உயிரிழந்துள்ளனர்.  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேரும், தனியார் மருத்துவமனையில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.  ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காவல் உதவி ஆய்வாளர் உள்பட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Related Stories: