புதுச்சேரி: புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகளுக்கு போதை பொருட்கள் கொடுக்க முயன்ற 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதிகளுக்கு உதவ முயன்ற சுரேஷ், கார்த்திகேயன், சீத்தாராமன், இளஞ்செழியன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை காலாப்பட்டு போலீசார் தேடி வருகின்றனர்.