புழல்: செங்குன்றம் அருகே ஜிஎன்டி சாலையில் நேற்று முன்தினம் இரவு முதல் கொத்தவால்சாவடி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் வெங்காய மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு ஆட்டோ வந்தது. அந்த ஆட்டோவை போலீசார் மடக்கிப்பிடித்து டிரைவரிடம் விசாரித்தனர்.பின்னர் ஆட்டோவுக்குள் சோதனை செய்தனர். அப்போது வெங்காய மூட்டைகளுக்கு நடுவே 21 பிளாஸ்டிக் பைகளில் 42 கிலோ கஞ்சாவை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.