செய்யூர்: செய்யூர் அருகே இளம்பெண் தற்கொலை வழக்கில் தலைமறைவான குற்றவாளியை கைது செய்யக்கோரி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செய்யூர் தாலுகா, நைனார் குப்பம் பகுதியை சேர்ந்த இளம்பெண் சசிகலா (28). கடந்த மாதம் 24ம் தேதி மர்மமான முறையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது, இறப்பில் பெண்ணின் உறவினரான தேவேந்திரன், புருஷோத்தமன் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர்களை கைது செய்து விசாரிக்க கோரி பெண்ணின் உறவினர்கள் செய்யூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.