திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் ரூ.50 கோடி உள்ளது. இந்நிலையில் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி நேரில் சந்தித்து பேசினார். அப்போது, கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பழைய ரூ.500, ரூ.1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார். பின்னர் சுப்பாரெட்டி கூறியதாவது:
கொரோனாவை தடுக்கும் விதமாக கடந்த 3 மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.