திருவில்லிபுத்தூர்: கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், திருவில்லிபுத்தூரில் தற்காலிக காய்கறி சந்தை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் நகர் பகுதியின் நடுவே மேலரத வீதியில் தற்காலிக காய்கறி சந்தை இயங்கியது. சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் அதிகமாக கூடியதால் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்தது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தற்காலிக காய்கறி சந்தையை மங்காபுரம் தனியார் பள்ளி மைதானத்திற்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.