சென்னை: தேர்தல் நடத்தும் விதிமுறை சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசின் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அனைத்து கட்சிகளிடம் ஆலோசனை நடத்த வேண்டும் எனவும் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.