சாத்தான்குளம் வழக்கில் 5 காவலர்களை 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிஐ மனுதாக்கல்

மதுரை: மதுரை நீதிமன்றத்துக்கு சிபிஐ அதிகாரிகள் வருகை புரிந்துள்ளனர். சாத்தான்குளம் வழக்கில் 5 காவலர்களை 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ மனுதாக்கல் செய்துள்ளது. முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட 5 காவலர்களை விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ மனுதாக்கல் செய்துள்ளது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகுகனேஷ் ஆகியோரை விசாரிக்க அனுமதி கோரி மனு அழிக்கப்பட்டுள்ளது. மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிஐயின் மனு சற்று நேரத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories: