×

கனமழை காரணமாக அசாம், பீகாரில் நூற்றுக்கணக்கானோர் பலி...! 24 மாவட்டங்களில் விளைநிலங்கள் நாசம்!!!

கவுஹாத்தி: கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் அசாம் மற்றும் பீகார் மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த சில நாட்கள் பெய்து வரும் கனமழையால் 24 மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், 82 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பு நீரில் மூழ்கி நாசமடைந்தது. இதனைத்தொடர்ந்து, 2 ஆயிரம் கிராமங்களை நீர் சூழ்ந்து 13 லட்சம் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

இதனால் வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  இதுவரை அசாம் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கி 44 பேரும், நிலச்சரிவில் சிக்கி 26 பேரும் உயிரிழந்தனர். மேலும், 16 மாவட்டங்களில் 224 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் கிழக்கு பீகாரும் கனமழை பாதிப்பிலிருந்து தப்பவில்லை. திடீரென ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் முஷாபர்பூர், தர்பங்கா உள்ளிட்ட பல மாவட்டங்கள் நீரில் தத்தளித்து வருகின்றன. சிவகார் என்ற இடத்தில் பாகமதி ஆற்றில் தடுப்பு சுவர் உடைந்ததால் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. எனினும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று மணல் மூட்டைகளை வைத்து உடைப்பை அடைத்தனர். மேலும், இதேபோல் கனமழை மற்றும் நிலச்சரிவால் அருணாசல பிரதேசத்திலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : hundreds ,districts ,farmlands ,Assam ,Bihar , Assam Flood Situation Worsens: 44 Dead, 13 Lakh Affected ...
× RELATED பாஜவின் பிரியாணி கூட்டமும்… தூக்கமும்…