விருதுநகரில் இன்று ஒரே நாளில் 258 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விருதுநகர்: விருதுநகரில் இன்று ஒரே நாளில்  258 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,331ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர். நேற்று பாதிப்பு ஏற்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சிவகாசி, ராஜபாளையம், அருப்புக்கோட்டை, விருதுநகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் மாரனேரி, செங்கமலநாச்சியார்புரம், சேர்வைக்காரன்பட்டி, மருதுபாண்டியர் மேட்டுதெரு, நேஷனல் காலனி, முத்துமாரிநகர், முஸ்லிம் வடக்கு தெரு, சாமிபுரம் காலனி, வடபட்டி, மாதாங்கோவில்பட்டி, ராஜதுரைநகர், பாரதிநகர், பி.எஸ்.கே.நகர் கிழக்கு, காமராஜர் நகர், அண்ணா காலனி, சாட்சியாபுரம், பராசக்தி காலனி, திருத்தங்கல் ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: