×

மண்டல வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் நிலவரங்களை வெளியிட்டது சென்னை மாநகராட்சி: தற்போது சிகிச்சை பெறுபவர்கள் 17,469 பேர்!

சென்னை : சென்னையில், மண்டல வாரியாக கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனாவால்  பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 77,338 ஆக உள்ளது. 1,253 பேர் உயிரிழந்த நிலையில், 58,615 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 17,469 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தவிர்த்து பிற மாவட்டங்களை சேர்ந்த 1,511 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 57.76 சதவீதம், பெண்கள் 42.24 சதவீதம். நேற்று மட்டும் சென்னையில் 9,189 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில், மண்டல வாரியாக  கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில், சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியலை இன்று சென்னை மாநகராட்சி  வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-

* அந்த பட்டியலில், திருவொற்றியூர் மண்டலத்தில் 707 பேரும், மணலியில் 294 பேரும்,  மாதவரத்தில் 540 பேரும் சிகிச்சையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

* தண்டையார்பேட்டை மண்டலத்தில் 1,331 பேரும்,  ராயபுரத்தில் 1,290 பேரும், திருவிக நகரில் 1,069 பேரும், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* அம்பத்தூர் மண்டலத்தில் 977 பேரும், அண்ணா நகர் மண்டலத்தில் 1,849 பேரும், தேனாம்பேட்டையில் 1,651 பேரும் , கோடம்பாக்கத்தில் 2,497 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* வளசரவாக்கத்தில் 979 பேரும், ஆலந்தூர் மண்டலத்தில் 595 பேரும், அடையாறு மண்டலத்தில் 1,323 பேரும்  பெருங்குடியில் 381 பேரும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 475 பேரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Tags : corona victims ,Chennai Corporation ,region , Chennai, Corona, corporation, zone, treatment
× RELATED இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பதற்றம்!