சென்னை: சென்னை மண்டலங்களில் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் விவரங்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னை கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,497 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அண்ணா நகரில் 1,849 பேரும், தேனாம்பேட்டையில் 1,651 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.