திருப்பத்தூர்: ஆம்பூரில் மருந்து வாங்க சென்ற போது இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்ததால் இளைஞர் தீக்குளித்தது தொடர்பாக பணியில் இருந்த 3 காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் ஊர்க்காவல் படையை சேர்ந்த 2 பேரையும் பணியிடமாற்றம் செய்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், விசாரணை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
ஆம்பூரில் போலீசார் கண்டித்ததால் இளைஞர் தீக்குளித்த விவகாரம்!: பணியில் இருந்த 3 காவலர்கள், 2 ஊர்காவலர்கள் இடமாற்றம்!!!
- இளைஞர் தீ சம்பவம்
- ஆம்பூர்
- போலீஸ்காரர்கள்
- ஊர்காவற்துறை
- காவலர்கள்
- இடம்பெயர்வதை
- அம்புர், இளைஞர்கள், வேலை