மாஸ்கோ: கொரோனா தடுப்பூசி மருந்தினை மனிதர்கள் மீது செலுத்தி சோதனை நடத்தி வெற்றி பெற்றுவிட்டதாக ரஷ்ய பல்கலை அறிவித்துள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பு மருந்தினை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. ஒரு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் பலக்கட்ட சோதனைகளுக்கு பிறகே பயன்பாட்டிற்கு வரும். அந்த வகையில் பல கொரோனாவுக்கான மருந்துகளும் சோதனைக் கட்டத்தில் உள்ளன. இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது செலுத்தி சோதனை நடத்தி வெற்றி பெற்றுவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த சொசோனோவ் பல்கலைக்கழகம் இந்த தடுப்பு மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக கூறியுள்ளது. இந்த தடுப்பூசியை ரஷ்யாவில் உள்ள கேம்லே தொற்றுநோய் மற்றும் நுண் உயிரியல் ஆராய்ச்சி மையம் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.