இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலை மாணவர் சேர்க்கை ஆன்லைனில் தொடக்கம்

சென்னை: இந்திராகாந்தி திறந்த நிலைப் பல்கலைக்கழக பட்டப்படிப்புகளுக்கான  சேர்க்கை ஆன்லைன் மூலம் தொடங்க இருக்கிறது. இது குறித்து இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழக சென்னை மண்டல இயக்குநர் பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: தற்போதுள்ள 2020-21 கல்வி ஆண்டுக்கான இளநிலை, முதுநிலைப் பட்டய, சான்றிதழ் படிப்புகளுக்கான சேர்க்கையை இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக் கழகம் தொடங்கியுள்ளது. இந்த படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். பாடப்பிரிவுகள், சேர்க்கை விவரங்கள் தெரிந்து கொள்ளவும், விண்ணப்பிக்கவும் பல்கலைக்கழகத்தின் www.ignou.ac.in என்ற இணைய தளத்தை பார்க்கலாம். மேலும் rcchennai@ignou.ac.in  என்ற சென்னை மண்டலத்தின் மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டும் தகவல் அறியலாம். இந்த பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் ஏதும் இல்லை. வரும் 31ம் தேதிவரை விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: