சாத்தான்குளம் இரட்டைப் படுகொலைக்கு நீதி கேட்டு காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் நடத்திய இணைய வழி போராட்டம்

காஞ்சிபுரம்: சாத்தான்குளம் இரட்டைப் படுகொலைக்கு நீதி கேட்டு காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் நடத்திய இணையவழி போராட்டம் கல்பாக்கத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது, மமக அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் ஜைனுலாப்தீன், மதிமுக தனசேகரன், சமூக ஆர்வாலர்கள் துரைசாமி தேய்வசிகாமணி, தமுமுக ஒன்றிய தலைவர் சாதிக்பாஷா, தமுமுக ஒன்றிய செயலாளர் இஸ்மாயில், மமக ஒன்றிய செயலாளர் ஷபியுல்லா தமுமுக நகர தலைவர் ரிஷி தாவுத் நகர செயலாளர் அப்பாஸ் அலி முத்த தலைவர் பீர் ராவுத்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று கண்டனங்களை பதிவு செய்தனர்.

இதேபோல் காஞ்சிபுரம் ஒலி முகமது பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமுமுக மாவட்ட செயலாளர் தாஜுதீன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணை செயலாளர் ஜாபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதே போல் செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தில் நடந்த இணைய வழி போராட்டத்துக்கு  மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் அச்சிறுபாக்கம் எஸ்.எம்.ஷாஜஹான் தலைமை தாங்கி நடத்திவைத்தார். இப்போராட்டத்தில் சாத்தான்குளம் காவல்துறை சித்ரவதை இரட்டை படுகொலைகளில் தொடர்புடையவர்கள் வழக்கை விரைந்து முடிக்க வலியுறுத்தப்பட்டது. சமூக இடைவெளி பின்பற்றி நடைபெற்ற இப்போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி அச்சிறுபாக்கம் ஒன்றிய  செயலாளர் எஸ்.ஜே.ரசூல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொன்டனர். 

Related Stories: