அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் இலவச மருத்துவ முகாம்

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில், கொரோனா பரவலை தடுக்க இலவச மருத்துவ முகாம் நடந்தது. அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் பள்ளிப்பேட்டை ஊராட்சியில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக பொது மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த மருத்துவ முகாமிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார் தலைமை தாங்கினார். இதில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அர்ச்சனாதேவி, ஊராட்சி செயலர் தயாநிதி மற்றும் அச்சிறுப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில், ஊராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர். அவர்களுக்கு தேவைப்படும்  மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதில் இருமல், காய்ச்சல், சளி என கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: