அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் 44 பேருக்கு கொரோனா தொற்று

மதுராந்தகம்:அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில், இதுவரை 44 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் இதுவரை 44 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், தற்போது 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், ஒருவர் இறந்து விட்டார். மற்றவர்கள், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதேபோன்று, கருங்குழி பேரூராட்சியில் 33 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில், ஒருவர் மரணமடைந்துள்ளார். 9 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் 13 பேருக்கு இதுவரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 12 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். ஒருவர் தற்போது சிகிச்சையில் உள்ளார்.

Related Stories: