புதுடெல்லி: ‘மோடி ஆட்சியில் சீனா அபகரித்த நிலம் என்ன ஆச்சு?,’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். லடாக் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் இருந்து சீனா பின்வாங்கியிருக்கும் விவகாரத்தில் மீடியாக்களை அரசு தவறாக வழிநடத்துவதாகவும், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நம் படைகள் விலகியிருப்பது இந்தியாவுக்கு பின்னடைவே என்றும் பாதுகாப்பு துறை நிபுணரின் கருத்து ஊடகத்தில் வெளி வந்திருப்பதை ராகுல் காந்தி தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.