×

திருத்துறைப்பூண்டியில் 17 வயது சிறுமிக்கு தாலி காட்டிய திருமணமான இளைஞர்: போக்சோ சட்டத்தின் கீழ் கைது..!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தலைக்காடு கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான பழனிமுருகன் என்பவர், இவருக்கு முன்னதாகவே திருமணமான நிலையில், தற்போது அவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், அதேப் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரின் வீட்டிற்குச் சென்ற பழனி, அங்கிருந்த சிறுமிக்கு தாலிக் கட்டியதாகச் சிறுமியின் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இது குறித்து சிறுமியின் தாய் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த காவல் ஆய்வாளர் புஷ்பவள்ளி பழனி முருகனை போக்சோ சட்டத்தில் கைது செய்தார். இதேபோல் முத்துப்பேட்டை அருகே உள்ள தில்லைவிளாகம் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் குளத்திற்கு குளிக்கச் சென்றுள்ளார்.

குளத்திற்கு குளிக்கச் சென்ற மனநிலை பாதிக்கப்பட்ட பெண், அப்போது அங்கு வந்த மணிகண்டன் என்பவர் அவரின் வாயில் துணியை வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண்ணின் தந்தை திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த காவல் ஆய்வாளர் புஷ்பவள்ளி மணிகண்டனை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags : Dhali ,Tali ,Thiruthuraipoondi ,Tiruchirapalli , Thiruthuraipoondi, Girl, Tali, Youth, Pokcho
× RELATED திருத்துறைப்பூண்டியில் டூவீலரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது