×

அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், தருமபுரி, ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.


Tags : districts ,places ,Meteorological Center ,Thundershowers ,Meteorological Department , Thundershowers , 14 districts, 14 hours , next 24 hours
× RELATED மார்ச் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை...