சென்னை: நெய்வேலி என்.எல்.சி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் என்ற ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே 13 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது ஒருவர் உயிரிழந்தார்.