சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை மரணம் தொடர்பாக கைதான மேலும் 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் சாமதுரை, செல்லதுரை ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காவலர்கள் வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ், ஆகியோரையும் எஸ்.பி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். தந்தை, மகன் சித்ரவதை கொலை வழக்கில் இதுவரை 10 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.