கூடுவாஞ்சேரி: தமிழகம் முழுவதும் உள்ள திருமண மண்டபங்களில் ஆகஸ்ட் மாதம் முதல் திருமணம் நடக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று அனைத்து கல்யாண மண்டப உரிமையாளர்கள் சங்க கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அனைத்து கல்யாண மண்டப மாநில உரிமையாளர்கள் சங்க கலந்தாய்வு கூட்டம் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் உள்ள என்பிஆர் திருமண மண்டபத்தில் நடந்தது. மாநில சங்க தலைவர் ஜான் அமல்ராஜ் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் வாசுதேவராவ், கௌரவ தலைவர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாநில பொருளாளர் என்பிஆர் மனோகர் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் கலந்துகொண்டு அனைத்து கல்யாண மண்டப உரிமையாளர்கள் சங்க துவக்க விழாவை குத்துவிளக்கு ஏற்றி கூட்டத்தை தொடங்கி வைத்தார்.