நெல்லையில் கொரோனாவுக்கு இன்ஸ்பெக்டர் பலி

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ், அதிவேகமாக பரவி வருகிறது. உயிரிழப்புகளும் அதிகரிப்பதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. நெல்லை மாநகர ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் சாதுசிதம்பரம் (54), பாளை கேடிசி நகரில் குடியிருந்து வந்தார். இவரது மருமகன், 2 வாரங்களுக்கு முன் கொரோனாவுக்கு பலியானார். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் சாதுசிதம்பரமும் கொரோனா பாதித்து நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர், நேற்று அதிகாலை இறந்தார். இவருடன் நெல்லை மாவட்டத்தில் கொரோனா பலி 19 ஆக உயர்ந்தது.

Related Stories: