×

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 8,139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்தை  கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 8,139 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,46,600- ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 223 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 10,116-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 4,360 பேர் கொரோனாவில் டிஸ்சார்ஜ்; இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,36,985-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Maharashtra , Maharashtra, Corona infection
× RELATED மகாராஷ்டிராவின் அகமத்நகர்...