அந்தியூர்: அந்தியூரைச் சேர்ந்த பாஸ்கரன் (44) என்ற ஆட்டோ ஓட்டுனர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டார். மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியில் இருந்த பாஸ்கரன் தற்கொலை செய்துகொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆட்டோ ஓட்டுனர் பாஸ்கரின் உடலை கைப்பற்றிய அந்தியூர் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.