புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், நிதி ஆயோக் உறுப்பினர்கள், அமைச்சரவை செயலாளர்கள் மற்றும் மத்திய அரசின் பிற மூத்த அதிகாரிகளுடன் நாட்டின் கொரோனா வைரஸ் நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலங்களில் நிலவும் கொரோனா நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடையே உரையாற்றிய அவர், பொது இடங்களில் தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் சமூக ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை நாம் மீண்டும் வலியுறுத்த வேண்டும்.