சென்னை: கிராமப் புறங்களில் கொரோனா தொற்று பரவுவது கவலையளிக்கிறது. வருமுன் தடுத்திட அரசு செயல்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்தவருகிறது. கொரோனா பரவலின் தொடக்கத்தில் சென்னையில் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இருந்தது. தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது. மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவும் வேகம் தீவிரமாகி உள்ளது.