திருப்பதி: திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் ரூ.1.25 கோடி மதிப்புள்ள 33 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிரடிப்படை எஸ்.பி ரவிசங்கர் கூறியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து செம்மரம் வெட்டுபவர்கள் திருப்பதி வனத்தில் ஊடுருவி உள்ளனர். சந்திரகிரி மண்டலம் கொத்தபேட்டா வனப்பகுதியில் செம்மரம் வெட்டிக் கடத்திய 20 பேரை போலீஸ் துரத்தி உள்ளது.