திருத்தணி: ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடாக திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வது வழக்கம். மலைக்கோவிலில் அதிகளவில் குரங்குகள் கூட்டம் உள்ளன. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு குரங்குகளுக்கு பழங்கள், பிரசாதங்களை வழங்கி மகிழ்வார்கள்.