காஞ்சிபுரம்: தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு, சில தளர்வுகளுடன் வரும் 31ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மாதம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் கெருகம்பாக்கம், மவுலிவாக்கம் ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமில், பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த மருத்துவ முகாமில் உடல் வெப்பநிலை பரிசோதனையில், கொரோனா அறிகுறி இருந்தால், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவதை காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், கலெக்டர் பொன்னையா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.