செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் வெளியிட்டுள்ள அறிக்கை. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் ஆண்டு தோறும் தமிழகத்தை சேர்ந்த சிறுபான்மையினருக்கு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதையொட்டி, இந்தாண்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனிநபர் தொழில் கடன், கல்விக்கடன் சுய உதவிக் குழுக்களுக்கான சிறுகடன் உதவிகள் வழங்கப்படுகிறது. தனிநபர் தொழில் கடன் திட்டத்தின் கீழ் வியாபாரம் செய்யவும், தொழில் தொடங்கவும் கடன் பெறலாம். சுயஉதவி குழுக்களுக்கான சிறு கடன் பெற இக்குழுவில் குறைந்தது 60 சதவீத சிறுபான்மையினர் இருத்தல் அவசியம்.